எம்ஜிஆரும் ரஜினியும் சந்திச்சிருக்காங்களா? – கேள்வி பதில் – 3
Friday, May 8, 2009 at 1:21 pm | 469 views
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் வருங்கால முதல்வர் ரஜினியும் சந்திச்சிருக்காங்களா? – கேள்வி பதில் -3
நாளை வா.. என்று சனி பகவானை டபாய்த்த வினாயகரின் கதை போலாகிவிட்டது, ‘கேள்வி பதில் பகுதி நாளை வெளியாகும்’ என்ற உங்கள் அறிவிப்பு’ என அன்புடன் நம்மைக் கடிந்து கொண்ட நண்பர்களின் ஆர்வத்துக்கு தலை வணங்குகிறோம்.
நண்பர்களே… தேர்தல் முடியும் வரை ஒரு பத்திரிகையாளனான நமது நேரம் நம் வசமில்லை என்பதைப் புரிந்து கொண்டு அமைதி காத்தமைக்கு நன்றி.
இனி இடைவெளியின்றி, பதில்கள் தொடரும். உங்கள் கேள்விக் கணைகளைத் தொடரலாம்…
வாழ்க்கையில் வெற்றி பெறுவது கஷ்டம்… அப்படியே வெற்றி பெற்றாலும் அதைத் தக்க வைத்துக் கொள்வது மிக கஷ்டம். அப்படியே தக்க வைத்துக் கொண்டாலும் அதைவிட பெரிய வெற்றிகளைத்தொடர்ந்து பெறுவது கஷ்டம்.
ஆனால் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்?
ஒருமுறை விழுந்தாலும் அடுத்த முறை அதைவிட மிகப் பெரிய உயரத்துக்கு எழுகிறாரே… எப்படி சாத்தியம் இது? எப்படி நானும் ஒரு ரஜினிகாந்த் ஆவது?
கோகுலன், rajini_kogulan@yahoo.com
‘இஷ்டத்தோட கஷ்டப்படு… நினைச்சது நடக்கும்’ – இது ரஜினி சொல்லும் வாழ்க்கைத் தத்துவங்களில் ஒன்று.
ரஜினிகாந்த் என்ற சூப்பர் ஸ்டார் ஒரே நாளில் உருவானவர் அல்ல. பொற்கொல்லனிடம் நிறைய அடிகள் பட்டு ஜொலிக்கிற தங்கத்தின் நிலைதான் ரஜினியின் நிலையும்.
இந்த அந்தஸ்தை அடைய அவர் செலுத்திய உழைப்பு, இழந்த விருப்பங்கள், தாங்கிய வலிகள்… நிச்சயம் கொஞ்சமல்ல. ஒரு சின்ன உதாரணம் பாருங்கள்…
விழாக்கள், சந்திப்புகள் என தொடர்ச்சியான வேலைப் பளுவை முடித்துக் கொண்டு விடியற்காலையில் 4 மணிக்குத்தான் படுக்கப் போயிருப்பார் ரஜினி. நன்கு அசந்து தூங்கும் நேரம். ஆனால் அடுத்த நாள் 7 மணிக்கு ஷூட்டிங் இருக்குமாம். சரியான நேரத்தில் எழுப்புவதற்கென்றே ஒரு உதவியாளர் இருப்பார். ஒரு கூஜா ஐஸ் தண்ணீரை அவர் முகத்தில் தெளித்து எழுப்பிவிடுவாராம். இதைச் செய்ய உதவியாளருக்கு பயமாக இருந்தாலும் அவரது வேலை அதுதான் என்பதால் மிகுந்த தயக்கத்துடனே செய்வாராம்.
1998-ல் ரஜினியிடம் உதவியாளராக இருந்த ஒருவர் சொன்ன தகவல் இது. பிலிமாலயா பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் ரஜினிக்கு நன்கு தெரிந்த மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவருமான திரு.ராதாராஜ் இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார்.
தான் ஒரு சூப்பர் ஸ்டார், நினைத்த நேரத்தில் போனால் கேட்பவர் யாருமில்லை என்ற மிதப்பில் அவர் ஒரு நாளும் படப்பிடிப்புக்குப் போனதில்லை. இன்று வரை அதுதான் நிலைமை.
தனக்கான நேரம், வாய்ப்பு வரும்வரை காத்திருக்கும் பொறுமையும், எதிரிகளையும் நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ளும் அவரது பெருந்தன்மையும்தான், எப்பேர்ப்பட்ட வீழ்ச்சியிலிருந்தும் அவரை எழ வைத்து, புதிய கிரீடங்களைச் சூட வைத்துள்ளது.
இந்தப் பண்புகளில் பத்தில் ஒரு மடங்காவது நீங்களும் வளர்த்துக் கொண்டால், உங்கள் துறையில் நீங்களும் சூப்பர் ஸ்டார்தான்!
************
இந்தியாவின் இன்றையப் பொருளாதார நிலை என்ன? வீழ்ச்சி நிலையில் இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா? வேலைவாய்ப்பு நிலை என்ன?
சாரு, _________
மேற்கத்திய நாடுகளில் இத்தனை காலமும் பாடாய்படுத்தி வந்த பொருளாதார மந்தம் இப்போது இந்தியாவில் பெருமளவு பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது உண்மையே.
முதல்முறையாக மீடியாவிலேயே இதன் தாக்கம் அதிகமாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. என்டிடிவி நிறுவனம் 20 சதவிகிதத்துக்கும் அதிகமான ஊழியர்களையும், டைம்ஸ் ஆப் இந்தியா நூறுக்கும் அதிகமான ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.
இதற்குக் காரணம், அந்நிய பொருளாதாரங்களை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது நாடு சார்ந்திருக்கத் தொடங்கியதே. சுய அடையாளம், சுய முயற்சிகள், சுய நிறைவு இந்த மூன்றும் இல்லாத பொருளாதாரத்துக்கு ஏற்படும் கதிதான் இப்போது இந்தியப் பொருளாதாரத்துக்கும் ஏற்பட்டுள்ளது.
விவசாயம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசுகள் உண்மையைச் சொல்லி மக்களை சுய நிறைவுக்கான முயற்சிகளில் ஈடுபட வைக்காமல், ஓட்டுப் பொறுக்கிகளாக மாறி, மக்களுக்கு பொய்யான தகவல்களைக் கொடுத்து வருகின்றன. இதனால் பாதிப்பின் அளவு இன்னும் அதிகரிக்கக்கூடும்.
*************
ரஜினி ரசிகன் என்ற கோணத்தில் அல்லாமல், தமிழர்கள், தமிழ் ஈழம் மற்றும் தமிழ்நாடு என்ற பார்வை இந்த தளத்தின் பின்னணியில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு வருமா?
வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநிலத்துக்கு முதல்வரானதை இந்தியாவில் வேறு மாநிலத்தில் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இந்தக் கருத்துக்கு நான் எதிரானவன் இல்லை என்றாலும், மொழி-இன உணர்வு என்று வரும்போது எல்லோரும் ஓரணியில் திரண்டுவிட, தமிழனிடம் மட்டும் அந்த உணர்வே இல்லையே..
ஜனா , rathernot@sorry.com
என்ன ஜனா… நமது தளத்தைப் பார்த்த பின்னும் இந்த சந்தேகம் வருவது நியாயமா…? (நிறைய கேள்வி கேட்டிருக்கீங்க.. ஒவ்வொண்ணா எடுத்துக்கிறேன்!)
இரண்டாவது கேள்விக்கு ஏற்கெனவே பதில் கூறியிருக்கிறோம். எம்ஜிஆர், ரஜினி வேறு மாநிலத்துக்காரர்கள் என்ற பார்வையிலேயே இந்த கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன என்பது நமக்கும் தெரியும். எம்ஜிஆர் பிறப்பால் மலையாளி என்று கூறப்பட்டாலும், முழுக்க முழுக்க தமிழராகவே, இன உணர்வு மற்றும் மொழி உணர்வுடன் வாழ்ந்தார். எத்தனை முதல்வர்கள் ஆண்டிருந்தாலும் காமராஜருக்குப் பின் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தை மட்டுமே தமிழகத்தின் நிம்மதியான ஆட்சிக் காலம் என அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். உண்மையும் அதுதான்.
ரஜினி பிறப்பால் வேறு இனமாக இருக்கலாம்… ஆனால் உணர்வால், மொழிப்பற்றால், மனிதாபிமானத்தால் மிகச் சிறந்த தமிழராகவே வாழ்பவர்.
இனம் மொழிக்கு அப்பாற்பட்டு, நல்லவர் பின்னால் நாடு நிற்கும் என்பதற்கு இந்தியாவில் ஏற்கெனவே பல உதாரணங்கள் உண்டு. ஒரு வங்காளி திரிபுராவுக்கு முதல்வராகவில்லையா?
சுதந்திரத்துக்குப் பின்னும், வெள்ளையரான மவுண்ட்பாட்டனை வேண்டி விரும்பி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக அமர்த்திப் பார்த்த நாடுதான் இது!
*************
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் வருங்கால முதல்வர் ரஜினியும் சந்திச்சி பேசி இருக்காங்களா ?
புயலமன், puyalaman@yahoo.co.uk
எம்ஜிஆர் – ரஜினி இருவருக்கும் ஆரம்பகாலத்தில் பெரிய அளவு நெருக்கம் ஏதுமில்லை என்றாலும், பின்னாளில் தனது ஆஸ்தான பட நிறுவனமான சத்யா ஸ்டுடியோ மூலம் பெரும் வாய்ப்புகளை ரஜினிக்கு உருவாக்கிக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல் அவர்கள். மூன்று முகம், தங்கமகன், ஊர்க்காவலன் மற்றும் பாட்ஷா படங்கள் ரஜினியின் திரையுலகப் பயணத்தில் மைல்கற்கள். எம்ஜிஆர் ஆசி இல்லாமல் இது சாத்தியம் இல்லை.
இருவரையும் பற்றி பல்வேறு செவி வழிக் கதைகள் சொல்லப்பட்டாலும், அவற்றையெல்லாம் பொய்யென நிரூபித்தது எம்ஜிஆர் மீது ரஜினி வைத்திருந்த மதிப்பும், அதை இன்று வரை தன் படங்களில் ரஜினி வெளிப்படுத்தி வரும் விதமும்.
ரஜினி – கமல் தலைமையில் திரையுலகமே கூடி எம்ஜிஆருக்கு விழா எடுத்ததை மறந்திருக்க மாட்டீர்கள். ஈழப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக எம்ஜிஆரைச் சந்தித்துப் பேசியுள்ளார் ரஜினி. தனிப்பட்ட முறையில் ஒரே ஒரு முறை ராமாவரம் தோட்டத்தில் எம்ஜிஆரைச் சந்தித்து ரஜினி பேசியதாகவும் சொல்கிறார் ‘இதயக்கனி’ ஆசிரியர் எஸ். விஜயன்.
*************
மேக்கப் போடாமல் நடிப்பது எப்படி?
பதி, kpathian@yahoo.co.in
அரசியல் – சினிமாவையெல்லாம் தாண்டி, நமக்குள்ளேயே நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்!
*************
விடுதலை புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பு அல்ல என்று நீங்கள் கூறி வருகிறீர்கள்.
ஆனால் அவர்கள் செய்த கொலைகளை பார்க்கும் போது ஒரு விடுதலை இயக்கம் செய்த செயல்கள் போலவா இருக்கிறது, போரில் போர் வீரர்களை தானே தாக்க வேண்டும், நாட்டின் ஜனாதிபதியையும், மந்திரிகளையும் கொலை செய்வது என்ன மரபு, மற்ற தீவிரவாத இயக்கங்களை விட பயங்கரவாத அமைப்பு போலதானே இருக்கிறது.
நாளை இவர்களை நம்பி நம் தமிழ் மக்களை எவ்வாறு விட முடியும். தனி ஈழ கோரிக்கை நியாயம்தான், அனால் அதை கையாளும் முறை சரி என்று உங்களுக்கு உண்மையிலேயே தோன்றுகிறதா?
பிரசாத், prasad.kumar@ge.com
இந்தியாவுக்குதான் புலிகள் தீவிரவாதிகள். ஆனால் ஈழத்து மக்களுக்கு ஒரே நம்பிக்கை புலிகள் மட்டுமே. தனி நீதிமன்றம், தனி போலீஸ், போக்குவரத்து, வரிவிதிப்பு, கல்வித்துறை, முப்படைகள் என ஒரு பக்கா அரசாங்கத்தை ஈழத்தில் நடத்தியவர்கள் புலிகள். இதையெல்லாம் தமிழர்களின் ஒத்துழைப்பும் நம்பிக்கையும் இல்லாமலா நடத்தியிருப்பார்கள்!
அமைதிக்காலம் என்ற பசப்பு வார்த்தையில் சிக்கிய புலிகள், அதன் பிறகு ஜனாதிபதி, மந்திரிகளை கொல்லவில்லை. அதற்கு முந்தைய அத்தகைய கொலைகளின் போது புலிகள் ஒரு கொரில்லா இயக்கம். கொரில்லா இயக்கத்துக்கு இந்த வரையறையெல்லாம் கிடையாது. அதை தங்கள் இயக்கத்தின் வலுவைக் காட்டவும், தமிழர் கோபத்தைக் காட்டவும் புலிகள் பயன்படுத்தினர்.
மரபு ரீதியான ராணுவமாக புலிகள் மாறிய பிறகு, தேர்ந்த ராணுவ போர் முறைகளையே புலிகள் கடைப்பிடித்தனர். அப்பாவி சிங்களர்களைக் கொல்லவில்லை. அதற்கான சந்தர்ப்பம் எவ்வளவோ இருந்தும், தங்கள் எதிர்ப்பை பெட்ரோல் கிடங்குகளைத் தகர்ப்பது, வரிவிதிப்பு மையத்தைத் தாக்குவது… இப்படித்தான் புலிகள் காட்டி வந்தனர்.
ஆனால் இலங்கை ராணுவமோ, அப்பாவி தமிழர் மீதும், தமிழர் தலைவர்கள் மற்றும் தளபதிகள் மீதும் குண்டுவீசித் தாக்கிக் கொன்றது.
‘புலிகளை நம்பலாம்… நிர்வாகத்தைத் தரலாம். மிகச் சிறந்த நிர்வாக முறையைத் தரும் வல்லமை, புத்திசாலித்தனம் மிக்கது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு. இந்த சான்றிதழ் நாம் தருவதல்ல…’ பிரான்ஸ், பிரிட்டன் போன்ற வெளிநாட்டவர்கள் தந்தது.
**************
கலைஞர் அவர்களின் உண்ணாவிரதம் நாடகம் இல்லையா?
தமிழக முதல்வர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்த போது காங்கிரஸ்சிடம் கடைசி நேரத்தில் கூட்டணியிலிருந்து விலகுவோம் என்று மிரட்டியதாக கூறப்பட்ட செய்தி உண்மையானதா?
செந்தில் மோகன் கே ஏ, senthilmka@gmail.com
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல உண்மையிலேயே பொருத்தமான நேரம் இதுவே. உண்மையில் ஈழ விவகாரத்தில் தமிழக அரசின் திடீர் மெத்தனம், அவ்வப்போது ஏற்படும் புரியாத திடீர் வேகத்துக்கு பலருக்கும் காரணம் தெரியாது. ஆனால் மீடியா நண்பர்களுக்கு நன்கு தெரிந்த உண்மை ஒன்றுண்டு.
ஈழ விவகாரத்தில் ஸ்டாலின் நிலைப்பாடும் கலைஞர் நிலைப்பாடும் நேர் எதிர். கலைஞரையும் மீறி, ‘ஈழத்துப் போரை சீக்கிரம் முடித்து வைக்குமாறு’ இந்திய அரசுக்கு இணக்கமான ஒத்துழைப்பைக் கொடுப்பதே ஸ்டாலின்தான் என்று வலுவான ஆதாரங்களுடன் திமுக பகுதிச் செயலாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். அது பெரிய அதிர்ச்சிதான். இது பலருக்குத் தெரிந்தும், சின்ன பத்திரிகைகள் மட்டும் செய்தி வெளியிடுவதும் மற்றவை அமைதி காப்பதும், அதைவிடப் பெரிய அதிர்ச்சி.
ஸ்டாலினையும் மீறி, கலைஞர் உண்ணாவிரதமிருந்ததற்குக் காரணம், ஈழத் தமிழர்கள் படும் கொடுமைகளை வீடியோ வடிவில் அவர் பார்க்க நேர்ந்ததும், தமிழ் உணர்வாளர்கள் சிலர் வைத்த உருக்கமான வேண்டுகோளும்தான். ஆனால் கலைஞர் சொன்னதுபோல இது ஒன்றும் திட்டமிடப்படாமல் நடந்ததல்ல. கலைஞர் உண்ணாவிரதமிருக்கப் போகிறார் என்பது முன்கூட்டியே மாவட்ட அளவில் தெரிந்து விட்டது. காலை 6 மணிக்கெல்லாம் பல மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் பந்தல் ரெடியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கலைஞர் அழுத்தம் கொடுத்ததும், அதற்கு கூட்டணி மறுபரிசீலனை என்ற அஸ்திரத்தை ஏவியதும்கூட உண்மையே என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். ஆனால் காங்கிரஸின் நரித்தனம், மூப்பின் இயலாமை மற்றும் குடும்ப பாசம் போன்றவை அவரது தமிழின உணர்வை, ‘மழை விட்டாலும் தூவானம் தொடரத்தானே செய்யும்’ என சொல்ல வைக்கும் அளவுக்கு மாற்றிவிட்டது!
**************
தமிழ் சினிமாவில் தரமான படங்கள் வரவே வராதா?
சக்திகுமார், shakthi41@hotmail.com

நல்ல தமிழ்ப் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் உள்ளன. என்ன… ஜான் ஏறினால் முழம் சறுக்கும் நிலை!
ஒரு நல்ல படம் வந்தால் தொடர்ந்து நாற்பது மோசமான படங்கள் வருவதுதான் சாபக்கேடு. இப்போது வந்துள்ள நல்ல படம் ‘பசங்க’. பார்த்துட்டு சொல்லுங்க!
-வினோ
இதற்கு முந்தைய கேள்வி பதில் பகுதியைப் படிக்க…
தமிழனை தமிழன்தான் ஆள வேண்டுமா? – கேள்வி பதில் -2
கேள்வி உங்கள் வழியில்… பதில் ‘என்வழி’யில்! - பகுதி 1













“மேக்கப் போடாமல் நடிப்பது எப்படி?
பதி, kpathian@yahoo.co.in
அரசியல் – சினிமாவையெல்லாம் தாண்டி, நமக்குள்ளேயே நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள்!”
- Very practical answer!
Thanks for your reply…
முதல் கேள்விக்கான பதிலும், அந்த படையப்பா ஸ்டில்லும் அருமை…
“பொற்கொல்லனிடம் நிறைய அடிகள் பட்டு ஜொலிக்கிற தங்கத்தின் நிலைதான் ரஜினியின் நிலையும்.”
செம டச்!
லேட்ட குடுத்தாலும் நச்சினு குடுக்கிருங்க நீங்க சொல்லுரவிதம் நல்லா இருக்கு
உண்மைலியே மத்திய அரசுக்கு ஈழப் பிரச்சினைல் அக்கறை இல்லையா ?சும்மா பத்திரிகைஇல ஏதாவது எழுதுனுனு எழதுராங்களா ?இதை அரசியல் பண்ணாமல் யாரால் தான் நல்ல ஒரு திர்மானம் காணமுடியம்
ஈழமாகட்டும் ரஜினியாகட்டும் நீங்கள் கொடுத்துள்ள பதில் நன்றாக இருக்கிறது.
super.
இதுவரை நான் படிக்காத புதிய தகவலை, முதல் கேள்விக்கான பதிலில் நீங்கள் கூறியுள்ளீர்கள். நான்ஒரு ரஜினி ரசிகனாக இல்லாவிட்டாலும், ரஜினியின் கடின உழைப்பு மற்றும் கமிட்மெண்டை மதிக்கிறேன்.
VINO SIR……
Thanks!
PERIYA AAL ayitinga…….day by day ur writings are really superb,polished and poising into our heart.ORU badhil eppudi irukanumo apdi irukkuthu.Stupendous effort!!
Neenga oru Journalist etc etc athelam theriyadhu…ipdi thaan ungala anbu thollai pannitae irupom…..COLLEGE TIMEla kuda padikka pudikkathu,neenga thane ipo padika vaikiringa…athunala…vidamatomla…avlo easya….
ANYWAY VINO…U REALLY ROCK!!!!!
___________
ஜனாவுக்கான உங்கள் பதில் அருமை .
என்னுடைய கேள்வி
“49 ‘0 ஓட்டை போடுவதற்கான வழி முறைகள் என்ன?மேலும் அந்த ஓட்டை மக்கள் ரகசியமாகவும் அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல் இல்லாமலும் போட முடியுமா?