முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! – சிவாஜிலிங்கம் எம்பி

Saturday, August 29, 2009 at 1:57 pm | 1,001 views

பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்!’ – சிவாஜிலிங்கம் எம்பி

கோவை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார். இதுபற்றிய நம்பகமான தகவல்கள் எனக்குக் கிடைத்துள்ளன, என்ற இலங்கை எம்பி சிவாஜிலிங்கம் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கோப்புப் படம்

கோப்புப் படம்

3 மாதங்களுக்கு முன், புலிகள் முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்ட தகவல் வெளியானபோது, ‘இன்னும் சில நாட்களில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்று புலிகளே அறிவிப்பார்கள்… சூழ்நிலை கருதி அப்படியொரு அறிக்கை வெளியாகும்!” என்று மதுரையில் இவர்தான் பேட்டி கொடுத்தார். அடுத்த சில தினங்களிலேயே அப்படியொரு அறிக்கையை செல்வராசா பத்மநாதன் வெளியிட்டார்.

இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம்,

எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்.

அவர் இறந்துவிட்டதாக செல்வராஜா பத்மநாதன் கூறியிருப்பதில் ஏதேனும் அரசியல் சூசகம் அடங்கியிருக்கலாம்.

பத்மநாபன் கைது முதற்கொண்டு பல விஷயங்களை நாங்கள் அப்படித்தான் கருதுகிறோம். தேசிய தலைவர் இறந்துவிட்டதாக எந்த தகவலும் எங்களுக்கு உறுதியாக, ஆதாரங்களுடன் கிடைக்கவில்லை. இலங்கை அரசு அதற்கான ஆதாரங்கள் எதையும் தரவுமில்லை. 29-sivajilingam200

நான் தமிழ்மக்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது இதுதான். தேசிய தலைவர் உயிருடன் உள்ளாரா என்பதற்கு காலம் பதில் சொல்லும். தற்போதைய உடனடி தேவை அகதிகளாக உள்ள 3 லட்சம் மக்களை அங்கிருந்து காப்பாற்றி, அவர்களின் இடங்களில் குடியமர்த்துவதுதான்.

மற்றபடி தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு என்பது சுய அரசியல் நிர்ணய சபையுடன் கூடிய தமிழீழமே. ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வதா இல்லையா என்பது விடுதலைப் புலிகளின் கையில்தான் உள்ளது என்றார்.

பிரபாகரன் குறித்து உண்மைகளைக் கண்டறிய இந்திய புலனாய்வுக் குழு இலங்கை செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் பல்வேறு விமர்சனங்களுக்கிடையிலும், தமிழுணர்வாளர்கள் நெடுமாறன், வைகோ, தொல் திருமாவளவன் மற்றும் இயக்குநர் சீமான் ஆகியோர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும் இறுதிக் கட்டப் போரை அவரே தலைமையேற்று நடத்துவார் என்றும் கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Comments

10 Responses to “பிரபாகரன் உயிருடன்தான் உள்ளார்! – சிவாஜிலிங்கம் எம்பி”
  1. rajini.bala says:

    GOOD NEWS.. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கூடிய விரைவில்..

  2. VEERANUKU ILLAI MARANAM!
    ILANGAI ARASUKU ILLAI SUTHANTHIRAM!

    Yenggal thalaivar varuvar! velvar!
    valga annan prabagaran.
    valum tamil samuthayam!

  3. மூன்று மாதங்களுக்கு பிறகும் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் குறித்த சர்ச்சை இன்னும் ஓயவில்லை.

    அவர் உயிருடன் இருப்பாரே ஆயின் உடனடியாக ஒரு சிறு வீடியோ வெளியிட வேண்டும், அதில் தன் மக்களுக்கு செய்தியுடன்.

  4. raavan rajhkumar-kudaththanai. says:

    engal thalaivar varuvaar…!avar eezhaththu meedpar!meendum uyirppaar!…ungal pathivugal engalukku puththuyir tharukirathu.thodarnthu ezhuthungal.-raavan rajhkumar-jaffna

  5. arun says:

    thamil valga

  6. Pharmk350 says:

    Very nice site!

  7. Thamizhselvan says:

    பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் . இதில் சந்தேகம் இல்லை . இலங்கை ராணுவம் நடத்திய கண் துடைப்பு நாடகம்தான் பிரபாகரனின் மரண செய்தி .

  8. Ulavan says:

    விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாது அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் என்ன காரணங்களுக்காக அந்த அமைப்பு தோற்றம் பெற்றதோ அந்தக் காரணங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் அப்படியேதான் இருக்கிறது என்பதே உண்மை.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)