முதல் பக்கம்    வணக்கம்!    ரசிகர் பக்கம்   தேர்தல்    புனைவுகள்    வணிகம்    நட்புடன்    சும்மா தமாசு    வீடியோ    இன்றைய கார்ட்டூன்    கேள்வி பதில்
  உலகம் சுத்தலாம் வாங்க!    நினைவுகளை மீட்டும் இசை!    இது எப்படி இருக்கு...!    அசத்தல் படங்கள்    ஃபிளாஷ்பேக்    எனது பக்கங்கள்    ஸ்போர்ட்ஸ்

ஜெ செய்தி: நக்கீரன் கோபால் வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைப்பு

Thursday, January 19, 2012 at 2:39 pm | 489 views

 ஜெ செய்தி: நக்கீரன் கோபால் வருத்தம் தெரிவித்ததால் வழக்கு முடித்து வைப்பு


சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிட்டதால் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது.

இதனால் வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நக்கீரன் இதழில் கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியிடப்பட்டது. இதில் ஜெயலலிதா பற்றி மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கூறியதாக ஒரு கருத்தை நக்கீரன் பிரசுரித்திருந்தது. இதனால் பெரும் பிரச்சனை எழுந்தது. நக்கீரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

இந் நிலையில் நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இணை ஆசிரியர் காமாராஜ் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நக்கீரன் கோபால் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டுரை வெளியிட்டதற்காக கடந்த இதழின் முதல் பக்கத்தில் வருத்தம் கோரி செய்தி வெளியிடப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

Related Posts with Thumbnails
© The content is copyrighted to Envazhi and may not be reproduced on other websites.

Speak Your Mind

  Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)